districts

ரூ.1.99 கோடியில் பாலம் கட்டும் பணி தீவிரம்

உதகை, ஜன.24- நீலகிரி மாவட்டம், கூடலூரிலிருந்து முதுமலை புலிகள் காப்பகம், தெப்பகாடு வழி யாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தெப்ப காட்டிலிருந்து மசினகுடி வழியாக உத கைக்கு கல்லட்டி மலைப்பாதை செல்கிறது. மைசூரிலிருந்து வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், கூடலூர் சென்று உதகை வருவதை காட்டிலும், மசின குடி வழியாக உதகைக்கு செல்வது மிகவும்  சுலபம் மற்றும் பயணநேரம் குறையும். இத னால் உதகை நோக்கி வருபவர்கள் இச்சா லையை பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரம் அபாயகரமான சாலை என்பதால், உத கையில் இருந்து கீழ் நோக்கி மசினகுடி, தெப் பகாடு வர வெளியூர் வாகனங்கள் அனுமதிக் கப்படுவதில்லை. முதுமலை புலிகள் காப்ப கத்தின் நடுவே மாயாறு ஓடுகிறது. தேசிய  நெடுஞ்சாலையையும், மசினகுடி சாலையை யும் இணைக்கும் வகையில் மாயாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு  பாலம் அமைக்கப்பட்டது. பழமை வாய்ந்த  இப்பாலம் பழுதடைந்ததால் கனகர வாகனங் கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுகிறது. இப் பகுதியில் புதிதாக பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து அப்பகுதி யில் புதிய பாலம் கட்ட ரூ.1.99 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்படு புதிய பாலம் கட்டும்  பணிகள் துவக்கப்பட்டன. இதனிடையே கூட லூர் பகுதியில் அடிக்கடி பெய்த மழை கார ணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கால் பாலம் கட்டும் பணிகள் தாமதம் ஏற்பட்டது.  தற்போது, தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் மேற்புறம் கான்கீரிட் தளம் அமைக்கும் பணி கள் துவங்க உள்ளதால் மார்ச் மாத இறுதிக் குள் பாலம் கட்டும் பணி நிறைவுபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.