திருப்பூர், பிப். 16 – கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ.15 லட்சம் செலவில் குப்பாண்டம்பாளையம் சமுதாய நலக்கூடத்திற்கு மேற் கூரை அமைக்கும் பணி வெள்ளியன்று தொடங்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி 53ஆவது வார்டு குப்பாண்டம்பா ளையத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் இந்த மேற்கூரை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி துணைமேயர் ஆர்.பாலசுப்பிரமணி யம், நான்காவது மண்டலத் தலைவர் இல.பத்மாநபான், மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆர்.மணிமே கலை ரவிச்சந்திரன் ஆகியோர் பணியை தொடங்க அடிக்கல் நாட்டினர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, ஒன்றி யக்குழு உறுப்பினர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.