districts

img

‘பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்’

பாலஸ்தீனத்தின் மீதான யுத்தத்தை உடனடியாக இஸ்ரேல் நிறுத்த வேண்டும். சோசலிச நாடுகளுக்கு எதிரான ஏகாதிபத்திய சூழ்ச்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, சர்வதேச சமாதான தினமான செப்.1 ஆம் தேதியன்று தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, துணைத்தலைவர் சி.அங்கம்மாள், போக்குவரத்து கழக மண்டலத் தலைவர் எஸ்.சண்முகம், செயலாளர் சி.முரளி, சிஐடியு நிர்வாகிகள் ஆணஸ்ட்ராஜ், சண்முகம் சங்கர், வெங்கட்ராமன், கண்மணி, ரகுபதி, ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.