கோவை தர்மராஜா கோவில் வீதி, கெம்பட்டி காலனியிலுள்ள தங்கநகை தயாரிப்பு பட்டறைகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று நேரில் சென்று, பொற்கொல்லர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். வி.செந்தில்பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் உடனிருந்தனர்.