கோவை, ஜன.30- கீரணத்தம் ஊராட்சியை மாநக ராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வியாழனன்று வீடுகளில் கருப்புக் கொடி கட்டி, கடையடைப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகள் 4 பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி என 14 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட உள் ளது. இதற்கு சில ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கீரணத்தம் ஊராட்சி பொதுமக்கள் தங்கள் ஊராட் சியை மாநகராட்சியுடன் இணைப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுக ளுக்கு முன்பு கருப்புக்கொடி கட்டி யும், கடைகளை அடைத்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும், அரசு தங்களின் கோரிக் கைக்கு செவி சாய்க்காத பட்சத்தில் இனிவரும் நாட்களில் பல்வேறு கட்ட தீவிர போராட்டங்களை முன்னெ டுக்க இருப்பதாக தெரிவித்தனர். நகராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி கிராம ஊராட்சியில் 6000க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் நூறுநாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். நகராட்சியாக்குவதன் மூலம் இவர்கள் வேலை பறிக்கப் படும். சொத்துவரி, குடிநீர் வரி, கட்டிட அனுமதி கட்டணம் உள்ளிட்டவை பல மடங்கு உயரும். எனவே, கவுந்தப்பாடி கிராம ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவுந்தப்பாடி நால்ரோட்டில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கிளைச் செயலாளர் எஸ். ஜானகி தலைமை வகித்தார். இதில், மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராக வன், செயலாளர் கே.சண்முக வள்ளி, பொருளாளர் எஸ்.மாணிக் கம் மற்றும் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.