கிருஷ்ணகிரி, மார்ச் 20- பள்ளி குழந்தைகளுக்கு இடையூறாக சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள கல், மண்ணை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. கடந்த அக்டோபரில் பெய்த கடும் மழையால் ஓசூர், தேன்கனிக்கோட்டை பிரதான சாலையிலுள்ள ஜான் போஸ்கோ பள்ளி சுற்றுச் சுவரை ஒட்டியுள்ள 10 அடி ஆழமுள்ள கழிவு நீர் கால்வாய் சரிந்து விழுந்தது. அங்கிருந்த மின் கம்பமும் சரிந்து விழும் நிலையில் இருந்தது. இரண்டு மாதங்கள் கடந்தும் கால்வா யும், மின் கம்பமும் சீர்படுத்தப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து சாய்ந்திருந்த மின் கம்பம் அகற்றப்பட்டது. கால்வாயில் சரிந்திருந்த கல்லும் மண்ணும் அள்ளி, பள்ளியின் வாயில் அருகே கொட்டினர். பின்னர் அவை அகற்றப்பட வில்லை. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள், பெற்றோர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். கல், மண்ணை அப்புறப்படுத்தக் கோரி இரண்டு மாதங்க ளுக்கு முன்பு சாராட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. ஆனால் இதுவரை அகற்றப்பட வில்லை. இந்நிலையில் உடனடியாக அவற்றை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாராட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சாந்தி நகர் கிளைச் செயலாளர் மஞ்சு, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், தலைவர் வாசுதேவன், கட்டுமான சங்க செயலாளர் சீனிவாசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், மாதர் சங்க மாநகரச் செயலாளர் ரத்தினா, கிளைச் செயலாளர் பாரதி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் சேது மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.