districts

img

ஓசூர் பிஎம்சி டெக்கில் விளையாட்டு விழா

கிருஷ்ணகிரி, மார்ச் 11- ஓசூர் பெருமாள் மணி மேகலை ஐடிஐ பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளின் சார்பில் நடைபெற்ற விளையாட்டு விழாவுக்கு பிஎம்சி டெக் கல்விக்குழுமத்தின் தலைவர் பெ.குமார் தலைமை தாங்கினார். தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட முதன்மை முன்பதிவு மேற்பார்வையாளரும், தடகள பயிற்சியாளருமான அண்ணாவி ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்தார். செயலாளர் பெ.மலர், அறங்காவலர் பெ.சசிரேகா, இயக்குநர் சுதாகரன், பொறி யியல் கல்லூரி முதல்வர் சித்ரா, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம், ஐடிஐ முதல்வர் பாபு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அண்ணாவி பரிசு வழங்கி பேசுகையில்,“விளையாட்டுத் துறையில் சாதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. படிப்போடு விளையாட்டையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அது உங்களுக்கு வாழ்க்கையில் தேவையான வெற்றியை தரும் என்றார். இதில் பாலிடெக்னிக் உடற்கல்வி இயக்குநர் கைலாசம், பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.