கிருஷ்ணகிரி, மார்ச் 1- தேன்கனிக்கோட்டை வட்டம் பல்லப்பள்ளி ஊராட்சி கெம்பத்தப்பள்ளி அருகே கூலி தொழிலாளியின் குழந்தையிடம் கல்கேரி நாராயணப்பா (70) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்த பெற்றோர் குழந்தையை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளியை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட குழந்தையை மாவட்ட குழந்தைகள் நல பாது காப்பு அலுவலர் சிவகாந்தி பார்வையிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தளி ஒன்றியச் செயலாளர் வெங்கடேஷ், கெலமங்கலம் ஒன்றியச் செயலாளர் சீனி வாசன், விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் அனுமப்பா ஆகி யோர் பாதிக்கப்பட்ட குழந்தை யின் பெற்றோர்களை மருத்துவ மனையில் சந்தித்து நடந்தவை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் குழந்தைகள், மாணவிகள், பெண்கள் மீது இதுபோன்ற பாலி யல் வன்கொடுமைகள், குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றை தடுக்க காவல்துறை தீவிர கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என காவல் ஆய்வாளரிடம் வலியுறுத்தினர்.