கிருஷ்ணகிரி, பிப். 7- கெலமங்கலம் ஒன்றியம் சந்தனபள்ளி ஊராட்சி எஸ். குருபட்டி கிராமத்தில் 35 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை வட்டம் கெல மங்கலம் ஒன்றியத்தில் உள்ள சந்தனபள்ளி ஊராட்சி செயலாளர் மக்கள் நலத்திட்டங்களில், பிரதமர்வீடு கட்டும் திட்டம், இலவச கழிப்பிடம் கட்டும் திட்டம், ஊராட்சி பணிகள் உள்ளிட்ட அனைத்திலும் பொய் கணக்கு எழுதியும், அரசு உத்தர வின்படி பசுமை வீடு, கழிப்பி டம் கட்டியவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்கா மல் வழங்கியதாக கணக்கு எழுதி தொடர்ந்து ஏமாற்றி வந்தார். மேலும் அடிதடி, லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகளிலும் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும், அவரை மாற்ற வேண்டும், அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தொடர் போராட்டங் கள் நடத்தப்பட்டன. அதன் எதி ரொலியாக தற்போது ஊராட்சி செய லாளர் மாற்றப்பட்டு அவர் மீது விசாரணை நடைபெற்று வரு கிறது. மேலும் ஊராட்சிக்கு புதிய செயலாளராக நியமிக்கப்பட்டு ள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் போரா ட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, ஊராட்சி பெண் வார்டு உறுப்பினர் நேத்ரா, மாதேஷ் உட்பட எஸ்.குருபட்டியை சேர்ந்த 35 பேர் தங்களை மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இதையடுத்து அங்கு புதிய கிளை அமைக்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகர், கெலமங்கலம் ஒன்றியச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.