விருதுநகர், மார்ச் 13- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விருதுநக ரில் சர்வதேச மகளிர் தினத் தையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. நகர் தலை வர் ஐ.ஜெயா தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் என்.உமாமகேஸ்வரி வரவேற்றார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மத்தியக்குழு உறுப்பி னர் எஸ்.பூங்கோதை, வாலி பர் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.ஜெயபாரத் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.நகர் செயலாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார். கருத்தரங் கில் ஏராளமானோர் பங்கேற்றனர். இராமநாதபுரம் இராமேஸ்வரத்தில் மாதர் சங்கம் சார்பில் சர்வ தேச மகளிர் தினம் கெண்டா டப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற கருத்தரங்கிற்கு தாலுகா செயலாளர் ஏ. ஆரோக்கிய நிர்மலா தலை மை வகித்தார். துணைச் செயலாளர் முத்து மாரி யம்மாள் வரவேற்றார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் உஷா பாசி சிறப்புரையாற்றி னார் மாவட்டச் செயலாளர் இ.கண்ணகி, தாலுகா தலை வர் க.வெங்கடேஸ்வரி, பொருளாளர் சுமதி உள்ளிட் டோர் பேசினர். சக்தி கனி நன்றி கூறினார்.