districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: மின்கம்பங்கள் மாற்றம்

கிருஷ்ணகிரி, மே 4- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாந்தி நகர், ராமநாயக்கன் ஏரி அருகில் உள்வட்ட சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏரிக்கரையை ஒட்டி பாலம் அமைக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த மின் கம்பிகள் பாலத்திலிருந்து கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரியில் நடந்து சென்ற ஒரு வாலிபரின் கை இந்த மின் கம்பி மீது பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மின்கம்பங் களை உயரமாக மாற்ற வேண்டும் என தீக்கதிரில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தாழ்வாக சென்ற 4  மின் கம்பங்கள் அகற்றப்பட்டு உயரமான இரும்பு மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி.