districts

கடப்பாரை ஆற்றில் அணை கட்ட கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜன. 17- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சிங்காரப்பேட்டை பகுதி ஜவ்வாது மலை அடியில் கடப்பாரை ஆறு உற்பத்தி யாகி கூட பட்டாணி, காமராஜ் நகர் சிறு ஏரிகளை நிரப்பி பாம்பாறு அணையில் இருந்து வெளியேறி வீணாக தென் பெண்ணை ஆற்றில் கலக்கிறது. ஜவ்வாது மலை கடப்பாரை ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என கடந்த  30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயி களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து  வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுப் பணித்துறை, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி  அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் ஆகியவற்றில்  பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சிங்காரப்பேட்டை ஊராட்சியில் போதிய அளவிற்கு ஏரி குளம் கால்வாய் இருந்தும் அதிகமாக மழை பெய்யும் காலங்களில் கூட நீர் நிலைகள் முழுமையாக நிரம்புவ தில்லை. இதனால் 50 ஆண்டுகளாக விவசாய த்துக்கு போதிய நீர் கிடைக்காததால் பல 100 ஏக்கர்  நிலங்கள் காய்ந்து தரிசாகி யுள்ளன. எனவே தமிழக அரசு கடப்பாரை ஆற்றின் குறுக்கே அணை கட்டி சிங்காரப்பேட்டை பகுதியில் விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள் ளனர்.