கிருஷ்ணகிரி,மே 27- கிருஷ்ணகிரி நகரை ஒட்டியுள்ள பெரிய முத்தூர் ஊராட்சியில் உள்ள சின்ன மத்தூர் அக்ரஹாரம் உட்பட 3000 மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ளவர்கள் மருத்துவமனை, பள்ளிக்கூடம், வட்டார வளர்ச்சி, ஊராட்சி அலுவலகங்கள், கடைவீதி, பேருந்து நிலையத்திற்கும் பெரிய முத்தூர் பிரதான சாலை வழியேதான் செல்ல வேண்டும். இந்த சாலை உட்பட ஊராட்சியில் அனைத்து சாலைகளும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாகவும் சிறு மழை பெய்தால் கூட சேறும் சகதியுமாகவும் காணப்படுகிறது. வாகனங்கள், மாண வர்கள் சைக்கிலில் செல்லக் கூட முடியாத நிலையில், இப்பகுதி மக்கள் அனைவரும் கடும் அவதிப்பட்டு வரு கின்றனர். ஊராட்சி மன்றத் தலைவர், செய லாளர், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகி யோருக்கு பல தெரிவித்தும் நிதி யும் இல்லை என்று தொடர்ந்து காலம் கடத்தி வருகின்றனர். இரு நாட்க ளுக்கு முன்பு பெய்த மழையில் சாலை குண்டும் குழியுமாய் சேறும் சகதியுமாய் போக்குவரத்திற்கு முற்றி லும் தடைபட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், பெரிய முத்தூர் ஊராட்சி சாலைகளை உடனடியாக சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.