கிருஷ்ணகிரி, ஏப்.23- மா சாகுபடி விவசாயிகளை அழிவி லிருந்து பாதுகாத்திட, உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி வட்டம், வேப் பள்ளி பகுதியில் மா சாகுபடி செய்து வரும் விவசாயிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் ஒருபுறம் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்ற முடி யாமல் மா மரங்கள் காய்ந்து வரும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக பூச்சிகள் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் கடந்த மூன்று மாதங்களாக பூக்கள் கருகி கொட்டி இலைகளும் ஓட்டையாகியும் காய்ந்து சுருண்டு மொத்த மா மரங்களும் பாதிப்படைந்து வரு கிறது. எனவே பூச்சிகளை தடுத்திட மருந்துகள் உடனடியாக அடிக்க வேண்டும், இந்த நோய் குறித்தும், கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைககளும் மானியத்தில் மருந்துகளும், கட்டுப்படுத்தும் பயிற்சியும் வழங்க வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிருஷ்ணகிரியில் தமிழகத்திலேயே மிக அதிகமாகவும் தரமாகவும் பல வகையான மாங்காய்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மா சாகு படி செய்யப்படும் நிலையில் மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர்களில் தொடர்ந்து விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த மா சாகு படியில் தற்போது 10 விழுக்காடு மட்டுமே விளைச்சல் கிடைத்துள்ளது 90 விழுக்காடு நட்டம் ஏற்பட்டுள்ளது மா விவசாய பரப்பும் வேகமாக குறைந்து வருகிறது.சாகுபடியும் கடுமையாக குறைந்து மா விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றிலும் பாதித்துள்ளது. பலர் கடன் வலையில் சிக்கித் தவிக்கின்றனர்.
இது குறித்து மூன்று முறை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். பூச்சிகள் வியாதிகளால் பூக்கள் இலைகள் மரங்கள் மாங்காய்கள் கடுமையாக பாதிப்படைந்து வரு வதை தடுத்திட உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதித்துள்ள மா சாகுபடியை ஆய்வு செய்து பாதிப்பிற்கு ஏற்ப போதிய நிவாரணம் வழங்க வேண்டும், இந்த சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டுப்படியான விலை நிர்ணயித்திட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மூன்றாம் முறையாக மா சாகுபடி விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.