districts

img

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மறியல்!

காஞ்சிபுரம்,மார்ச் 28- ஒன்றிய பாஜக அரசின்  பொருளாதார கொள்கை கள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலை நிறுத்தம் முழுமை யாக நடந்தது. திருவள்ளூர், ஊத்துக் கோட்டை, திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பொதட்டூர் பேட்டை, பொன்னேரி ஆகிய 6 போக்குவரத்து பணிமனையில் மொத்தம் 223 அரசு பேருந்துகள் உள்ளன. இதில் 80 பேருந்திற் கும் குறைவாக இயங்கின. செங்கல்பட்டு மாவட்டம்  முழுவதும் 90 விழுக்காடு பேருந்துகள் இயக்கப் படவில்லை. மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க வில்லை. காஞ்சிபுரம் மாவட்டத் தில் மொத்தம் 140 பேருந் துகள் உள்ளன. இதில்  10 பேருந்துகள் மட்டுமே ஓடின இதனால் பேருந்து நிலையங்களில் பயணிகள்  நீண்ட நேரம் காத்துக்கிடந்தனர். 

கைது
செங்கல்பட்டு தலைமை  தபால் நிலையம் அருகி லும், திருப்போரூர் புதிய பேருந்து நிலையம் முன்பும், கல்பாக்கம், கூவத்தூர் ஆகிய பகுதிகளிலும் சாலை மறியல் நடைபெற்றது. பொண்ணுராம் (தொமுச), கே.சேஷாத்திரி, க.பகத் சிங்தாஸ், இ.ராமமூர்த்தி (சிஐடியு), இ.சங்கர், எம்.செல்வம் (சிபிஎம்), ஆதி மூலம் (ஏஐடியுசி) ஆகி யோர் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டத் தில் 7 மையங்களில் அனைத்து தொழிற் சங்கங் கள் சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்களை காவல் துறையினர் கைது செய்த னர். கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை யில் நடைபெற்ற போராட் டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், துணைத் தலைவர் அர்ஜூ னன், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ்.கோபால், தொமுச  மாவட்ட நிர்வாகி மணி பாலன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜெ.அருள் மற்றும் பலர் கைது செய்யப் பட்டனர்.  திருவள்ளூரில் அரசு  போக்குவரத்து தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ப.சுந்தரராஜன், ஐஎன்டியுசி மாவட்டதலை வர் ஜெயபால் ஆகியோர் தலைமை தாங்கினர். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் கஜேந்தி ரன் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகி லட்சுமி உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்
திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், படப்பை, குன்றத்துர் ஆகிய 5 பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் 1500 பேர் காவல் துறையினர் கைது செய்த னர்.சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலா ளர் எஸ்.கண்ணன், இ.முத்து க்குமார், டி.ஸ்ரீதர், பி.ரமேஷ் (சிஐடியு), சி.சங்கர் (சிபிஎம்), கே.நேரு (தவிச),  ஏ.இளங்கோவன் (தொமுச) இராம.நீராலன்  (ஐஎன்டியூசி), ஏ.மூர்த்தி  (ஏஐடியுசி), கே.ஆபத் சகாயம் (எச்எம்எஸ்), ஆ.மதுசூதனன்(சிஐடியு) எல்.முருகேசன் (மலை சங்கம்), வி.பாலாஜி (நோபல் டெக்), ஜி.கோபால கிருஷ்ணன் (பியூர் பெட்ரோ), முருகன், சந்துரு  (ஆட்டோ),கே.வி.மனோ கரன் (தவிச), எம்.மணி கண்டன் (அப்போலோ டயர்), ஜே.குருராஜ் (ஜே.கே.டயர்), மோகன்தாஸ் (போக்குவரத்து),) எ.சதிஷ் (ஆட்டோ) ஆகியோர் பங்கேற்றனர்.