districts

img

எலி கடித்து அரிசி மூட்டைகள் சேதம்

காஞ்சிபுரம், ஜூன் 26 - எலி கடித்து சேதப்படுத்தப்பட்ட அரிசி மூட்டை அதிகாரிகள் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காவந்தண்டலம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாண வர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் இருப்பில் இல்லாமல் மாயமானது. சமைக்க பயன்படும் அரிசி மூட்டைகளை எலி சேதப்படுத்தி இருந்தது உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் இது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதனன்று ஆட்சியர் கலைச்செல்வி மோகன், வாலாஜா பாத் பகுதியிலும் பிற அலுவலர்கள் பல்வேறு பகுதிகளில் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காவாந்தண்டலம் கிராமத்தில் ஆவின் நிறுவன அதிகாரி பானுமதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.   இதனைத் தொடர்ந்து அங்குள்ள சத்துணவு மையத்தை ஆய்வு மேற்கொண்டு இருப்பு நிலைகளை கேட்டு அறிந்து ஆய்வு மேற்கொண்ட போது அதிர்ச்சி அடைந்தார்.அங்குள்ள பதி வேட்டில் உள்ள இருப்பு நிலைக்கும், அங்கி ருந்தவைக்கும்  வித்தியாசம் இருந்தது.

மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மூட்டை எண்ணிக்கையிலும் அதிக அளவு வித்தியாசம் இருந்தது. பள்ளி மாணவர்கள் சத்துணவு உண்பது குறைவான எண்ணிக்கையிலே இருந்தது. ஆனால் உணவு தயாரிப்பு எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.சத்துணவு குறித்த ஆய்வுகள் இதிலிருந்து முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரிந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்ட அரிசி மூட்டைகளை எலிகள் கடித்து சேதப்படுத்தி உள்ளதும், அதே அரிசியை கொண்டு உணவு தயாரிப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.