கள்ளக்குறிச்சி, அக். 8- கள்ளக்குறிச்சி நகர மன்ற கூட்டம் தலைவர் சுப்ரா யலு தலைமையில் வெள்ளி யன்று (அக். 7) நடை பெற்றது. துணைத் தலைவர் ஷமீம்பானு, நகராட்சி ஆணையர் குமரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். கூட்டத்தில் கள்ளக் குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் குளோரி னேசன் செய்யப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். துருகம் சாலையில் மயான பகுதியில் அமைந்துள்ள நுண் உர மையத்திற்கு ஈரக் கழிவுகளை சாறு பிழியும் இயந்திரம் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கு தல். ஏமப்பேர் பகுதியில் உள்ள குளத்தின் வெளிப் புறத்தின் கரை பகுதியின் மூன்று புறமும் சுவர் கட்டி மண் நிரப்புதல், சிறுபாலம் அமைக்க ஒப்புதல், விளாந் தாங்கள் சாலை குறுக்கே புதிதாக சிறிய பாலம் அமைத்தல். குளத்து மேட்டு தெரு வில் தார் சாலை அமைத்தல். ஏமப்பேர் பேருந்து நிறுத் தத்தில் புதிதாக நிழற்குடை அமைத்தல். விஜயலட்சுமி நகர் பகுதியில் 35 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைத்தல். கள்ளக்குறிச்சி நகராட்சியில் 100 சதவீதம் திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத நகராட்சியாக அறிவித்தல் உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில் கவுன்சிலர்கள் பாபு, பால்ராஜ், யுவராணி, முருகன், ரமேஷ், ஞான வேல், செல்வம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.