districts

img

வேலைவாய்ப்புக்களை உருவாக்கித் தரும் ‘பாலம்’ திட்டம் முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் துவக்கம்

கரூர், மார்ச் 31 - கரூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு தனியார் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அரசுக்கு ஏராளமான இளைஞர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர், வேலை தேடும் நபர்களுக்கும், வேலை வழங்கும் தொழில் நிறுவனங்களுக்கும் ஒரு இணைப்பு முகமாக மாவட்ட நிர்வாகம் இருந்து அனைவருக்கும் தகுதிக்கேற்ப தனியார் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில் “பாலம்” என்ற திட்டத்தை தமிழகத்திலேயே முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் செயல்படுத்த நடவ டிக்கை எடுத்துள்ளார். தமிழ்நாடு மாநில  ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த மார்ச் 8 அன்று மாவட்ட ஆட்சி யர் த.பிரபுசங்கர் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், மின்சாரம் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை  அமைச்சர் வி.செந்தில்பாலாஜி  இத்திட் டத்தினை துவக்கி வைத்து 5 தனியார்  தொழில் நிறுவனங்களின் மூலம் 25  நபர்களுக்கு பணிநியமன ஆணை களை வழங்கினார். அந்த வகையில், ஆயத்த ஆடை உற்பத்தி, பேருந்து கட்டுமானம் மற்றும்  கொசுவலை உற்பத்தியில் ஆசியா விலேயே முக்கிய பகுதியாக கரூர் விளங்கி வருகிறது. எண்ணிலடங்கா திட்டங்களை கரூர் மாவட்டத்திற்கு வழங்கி வரும் தமிழ்நாடு முதல மைச்சர், கரூர் மாவட்டத்தில் முதன்மு றையாக இந்த “பாலம்” திட்டத்தை துவங்கியுள்ளார்.

கரூர் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ள நகர வாழ்வாதார மையம் ஒரு வேலைவாய்ப்பு அலுவல கம் போலவே செயல்படும். கரூர் மாவட்டத்தில் உள்ள மாநக ராட்சி அலுவலகம், புதிதாக அமைக்கப் படவுள்ள மண்டல அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார  வளர்ச்சி அலுவலர் அலுவலகங்கள், பேரூராட்சி செயல் அலுவலர் அலுவல கங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  உள்ளிட்ட அரசு அலுவலங்களில் பாலம் மூலம் விண்ணப்பிக்க பிரத்யேக விண்ணப்ப படிவங்களும், அவற்றை பூர்த்தி செய்து வழங்க தனியாக பெட்டி களும் வைக்கப்பட்டிருக்கும். வேலை தேடும் நபர்கள் தங்களின் கல்வி, எந்த வகையான பணி செய்ய விருப்பம், பயிற்சி தேவையா என்பன போன்ற விபவரங்களை பூர்த்தி செய்து  விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.  அவ்வாறு அளிக்கப்படும் விண்ணப்பங் கள் இந்த தலைமை அலுவல கத்தில் பிரித்தெடுக்கப்பட்டு, விண்ணப்ப தாரர்களின் தேவைகளுக்கு ஏற்ப நேரடி  வேலைவாய்ப்பு வழங்குவதற்கும், பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் மாவட்டத்தில் உள்ள இந்திய தொழில் கூட்டமைப்பினர் முதற்கட்ட மாக 4,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு களை உருவாக்கித் தர தயாராக உள்ள தாக தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் இருந்து எண்ணற்ற இளைஞர்கள் மிகுந்த ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகிறார் கள். இத்திட்டத்தின் மூலம் பயன டைந்தவர்களும், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு முதலமைச்சருக்கு நன்றி  தெரிவித்துள்ளனர்.