கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலையில் பணியாற்றியவர் மறைந்த தோழர் ராஜசேகரன் - கிருஷ்ணவேணி இல்ல திருமண வரவேற்பு விழா கரூரில் உள்ள ஆர்த்தி ஹோட்டலில் நடைபெற்றது. மணமக்கள் ராஜ்மோகன்-சங்கீதா ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசுவிடம் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயிரத்தை வழங்கினர். கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஹோச்சுமின், கரூர் மாநகர குழு செயலாளர் எம்.தண்டபாணி, கரூர் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.