districts

கரூர் மாவட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கான பணிகளை துவங்குவதில் தாமதம்: சிஐடியு கண்டனம்

கரூர், மார்ச் 8 - கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 4 இடங்களில் மணல் அள்ளுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தும், மாட்டு  வண்டி மூலம் மணல் அள்ளுவதற்கான துவக்க பணிகளை சம்மந்தப்பட்ட அலு வலர்கள் செய்யாமல் காலம் தாழ்த்துவ தற்கு கண்டனம். உடனடியாக பணி களை மேற்கொள்ள வேண்டும்.  மணல் மாட்டுவண்டி தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத் திடும் வகையில் கரூர் மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கரூர் மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத் தின் (சிஐடியு) கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் பொதுப் பணித்துறை அலுவலகத்தில் உள்ள நீர்வளம் மற்றும்  கனிம மேலாண்மை உதவி செயற்பொ றியாளரிடம் சிஐடியு மாவட்ட செயலா ளர் சி.முருகேசன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.   பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர் சி.முருகேசன் கூறு கையில், கும்பகோணம் பகுதியில் மாட்டுவண்டி மூலம் மணல் அள்ளு வதற்கு  ஆறுகளில் பாதை அமைக்கும்  பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வரு கின்றன. ஆனால் கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் மாட்டுவண்டி மூலம் மணல் அள்ள அரசு அனுமதித்துள்ளது. இதுவரை எந்தவித ஆயத்த பணிகளை யும் அதிகாரிகளும், அலுவலர்களும் துவங்காமல் உள்ளனர்.  எனவே மாட்டுவண்டி தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தி டவும், கட்டுமான பணிகளை மேம்ப டுத்தவும், மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளுவதற்கு காவிரி ஆற்றுப் பகுதிகளில் பணிகளை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத் தோம். இதற்கு உதவி செயற்பொறியாளர் இன்னும் 15 நாட்களுக்குள் பணிகள் துவங்கப்படும். மணல் அள்ளுவதற்கு ரிய உத்தரவுக்காக காத்துக் கொண்டி ருக்கிறோம். உத்தரவு கோப்புகளை மேல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள் ளோம். திரும்பி வந்தவுடன் மணல்  அள்ளுவதற்கான பணிகள் உடனடியாக  துவங்கப்படும் என தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.