districts

img

பாரி சர்க்கரை ஆலை வெளியேற்றும் நச்சு புகையால் மக்களுக்குப் பாதிப்பு ஆலை நிர்வாகத்தை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கரூர், மார்ச் 8- புகளூர் இஐடி பாரி சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் நச்சு புகையை காற்றில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்காத ஆலை நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் ஒன்றியக் குழு சார்பில்  சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் ஒன்றி யச் செயலாளர் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கே.சண்முகம் துவக்கி வைத்தார். மாவட்டச் செய லாளர் மா.ஜோதிபாசு மற்றும் மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம் புகளூரில் இயங்கிவரும் இஐடி பாரி சர்க்கரை ஆலையில் பாய்லரில் எரிக்கப்படு கின்ற நிலக்கரி மற்றும் கரும்புகை யிலிருந்து வெளியேறுகின்ற கரித் துகள்களை அப்புறப்படுத்தும் இயந்திரங்களை நிர்வாகம் முறை யாக பராமரிக்காததால்  பாய்லரின் புகை போக்கியிலிருந்து வெளி யேறும் புகை கருமை நிறத்துடன் கரித்துகளுடன் வெளியேறுகிறது.  இதனால், புகளூரை சுற்றி பல  கிலோமீட்டர் வரை வீடுகளில் கரித்  துகள்கள் படிந்துள்ளது. மிக நுண்ணிய மைக்ரான்களில் கரித்  துகள்கள் காற்றில் கலந்து வருவ தால், அதனை சுவாசிக்கும் மக்க ளுக்கு பல்வேறு நோய் உபாதை கள் ஏற்படுகின்றது. குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் சுவாசக் கோளாறு நோயா ளிகள் கடுமையாகப் பாதிக்கப்படு கின்றனர்.  எனவே ஆலை நிர்வாகம் முறை யான இயந்திரங்களை பயன் படுத்தி புகைபோக்கி  மூலமாக கரித்துகள்கள் காற்றில் பரவாமல் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகள் மற்றும் மாவட்ட நிர்வா கம் உடனடியாக இந்த பிரச்சனை கள் மீது தலையிடு செய்து புக ளூர் சுற்றுப்பகுதி மக்களின்  பாதுகாப்பையும் ஆரோக்கியத் தையும் உறுதிப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத் தப்பட்டது.