கரூர், ஜன. 29 - கரூர் மாவட்டம் புகளூர் நகராட்சிக்குட் பட்ட 14 ஆவது வார்டில் (பழைய 7 ஆவது வார்டு) ஓம்சக்தி நகர் உள்ளது. இங்கு நூற்றுக் கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஓம் சக்தி நகருக்கு செல்லும் முன்பகுதியில் புகளூர் நதிநீர் ஏற்று பாசனத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடம் எவ்வித பயன்பாடு மின்றி இருப்பதால், முட்புதர்கள் அதிக அளவில் முளைத்து அடர்ந்த காடாக காட்சி அளிக்கிறது. இந்த இடத்தை சமூக விரோதிகள் பயன்ப டுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் விஷ ஜந்துக்கள் அதிக அளவு உள்ளன. இதனால் சிறுவர்கள், பெண்கள், மாண வர்கள் அந்த இடத்தை கடந்து செல்வதற்கு மிகவும் அச்ச மாக உள்ளதாக தெரிவிக்கின்ற னர். முட்புதர் பகுதியில் அதிக மாக பாம்புகள் உள்ளது. பாம்பு கள் குடியிருப்பு பகுதிகளுக் குள் சென்றுவிடுமோ என்ற பய மும் அதிகமாக உள்ளது. பாதுகாப்பு இல்லாத இந்த இடத்தை சுத்தம் செய்து, சிறுவர் பூங்கா வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தேர்தலின்போது, அந்த காலியிடத்தில் சிறுவர் பூங்கா அமைத்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக, ஓம்சக்தி நகர் பொதுமக்கள் தெரிவித்தனர். அந்த வாக்குறு தியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.