கரூர், ஜன.29 - தாந்தோன்றிமலை காவல் எல்லைக்குட்பட்ட அப்பிபாளையம் பகுதியில் கடந்த 26.1.2022 அன்று செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த சர வணன் என்பவர், அப்பிபாளையத்தில் வசித்து வரும் கமலநாதன் மனைவி அய்யம்மாளிடம் ரூ. 10,000 கடன் தொகைக்கு 15 தினங்களுக்கு ஒரு முறை வட்டி மட்டும் ரூ.1000 செலுத்தும் வகையில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் கந்து வட்டி கும்பல் வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொ டர்பாக குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலித் விடுதலை இயக்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமநீதி கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட தோழமை இயக்க ங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கருப்பையா, மாநில துணைத் தலைவர் தலித் ராஜகோபால், சமநீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் புகழேந்தி, கண்மணி, ராமச்சந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கராத்தே இளங்கோ, மாவட்ட ஊடக மையம் அமைப்பாளர் புலி ஈழம் உதயா, புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணைச் செயலா ளர் வழக்கறிஞர் பெரியசாமி உள்ளிட்டோர் கூட்டாக கையப்பமிட்டு பாதிக்கப்பட்டவர்களோடு இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செய லாளர் ச.கருப்பையா, அத்திபாளையம் சம்பவம் தொடர்பாக தாந்தோன்றிமலை காவல்நிலையத் தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப் பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்று கந்துவட்டி கும்பல் தொ டர்ந்து வன்முறையில் ஈடுபடாமல் இருக்க வேண்டுமெனில் காவல்துறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் பிப்ர வரி 2 ஆம் தேதி ஜனநாயக இயக்கங்களை ஒருங்கிணைத்து கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.