districts

img

யானைகளின் தந்தம், பற்கள் விற்பனை அருமனை அருகே மூன்று பேர் கைது

அருமனை, ஜூன் 4- கன்னியாகுமரி கடையாலுமூடு பகுதி யில் யானை தந்தம் மற்றும் பற்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவ லின்பேரில் மாவட்ட வனத்துறை  மற்றும் சென்னை வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். 

அதில் அருமனை பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன் எட்வின் தேவராஜ் (67)  வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த யானைத் தந்தங்களை கைப்பற்றினர்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த பிரதீப் குமார் (53) என்பவரும் வனத்துறை யினரால் கைது செய்யப்பட்டார். மேலும் இவர்கள் இருவரிடம் நடத்திய விசாரணை யில் இதற்கு மூல காரணமாக இருந்தது கல்லரவயல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் காணி (46) என்பவர் என்பது தெரிய வந்தது. பின்பு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை யில் யானைத் தந்தங்கள் விற்பனைக்காக எட்வின் ராஜ் என்பவரிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.  சுரேஷ் வீட்டில் இருந்து நான்கு யானைப் பற்கள் கைப்பற்றப் பட்டது. இவர்கள் மூவரையும் கைது செய்து நாகர்கோயில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.

;