districts

img

முன்னாள் தேர்தல் ஆணையர் லவாசா குடும்பத்தையே வேட்டையாடிய மோடி : க.கனகராஜ்

மோடி அமித்ஷா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெரிவித்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசா குடும்பத்தையே மோடி அரசு பழிவாங்கி வேட்டையாடிதாக க.கனகராஜ் கூறினார்.

 கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடந்த சிபிஎம் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பின் க.கனகராஜ் இதுகுறித்து மேலும் கூறியதாவது: தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், எதிர்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர். இப்போது இந்திய தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமர் நியமனம் செய்யும் ஒரு ஒன்றிய அமைச்சர் குழுவில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் நடந்தபோது தேர்தல் ஆணையராக இருந்தவர் அசோக் லவாசா. அவர் திடீரென ராஜிநாமா செய்தார்.

இவர் 2019 தேர்தலின்போது மோடியும் அமித்ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெரிவித்தார். மற்ற இரண்டு ஆணையர்கள் மோடியும் அமித்ஷாவும் குற்றவாளிகள் இல்லை என்று எழுதினார்கள். அந்த பின்னணியில் லவாசா ராஜிநாமா செய்தார். வேறு வழியில்லாமல் தான் ராஜநாமா செய்ததாக பின்னர் அவர் கூறினார். லவாசா ராஜிநாமா செய்த பிறகு அவரை மோடி அரசு வேட்டையாடத தொடங்கியது. அவர் மனைவி நடத்தி வந்த நிறுவனத்தை வருமான வரித்துறை சோதனை செய்தது. மகளது நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை. அவரது சகோதரி வேலை செய்த நிறுவனத்தை சோதனையிட்டார்கள். ஐஏஎஸ் அதிகாரியான அவரது மகன் பழிவாங்கும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டார்.

சமீபத்தில் அருண் கோயல் என்கிற தேர்தல் ஆணையர் ராஜிநாமா செய்தார். ஐஏஎஸ் அதிகாரியான அவரது நியமனத்தில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. ஆனால் அவர் நேர்மையானவர் என்று கூறி நியமனம் செய்யப்பட்டார். தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறபோதே புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்கிறார்கள். மோடி வெற்றி பெற்றுவிட்டால் தேர்தல் என்பதே இருக்காது. தேர்தல் ஆணையமே இருக்காது என்றார். ஆனால், மோடிக்கு தேர்தல் ஆலோசகராக இருந்து பிரசாந்த் கிஷோரே பாஜக 200 இடங்களி்ல்கூட வெற்றி பெறுவது கடினம் என தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.