districts

திருப்பாதிரிப்புலியூர் பூ சந்தையில் குவிந்துள்ள குப்பைகள்

கடலூர், அக். 30- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் பகுதிகளில் உணவகங்கள், பூ கடைகள், நடைபாதை பழக் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இதன் காரணமாக தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும் பூ மார்க்கெட்டில் தினசரி கிலொ கணக்கில் பூக்கள் வீணாகி அதே பகுதி யில் கொட்டப்பட்டு வருகின்றது. அதே போல் அந்த  பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் இருந்தும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் பூ மார்க்கெட் பகுதிகளில் தற்போது மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் தற்போது துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குப்பை கள் முறையாக அகற்றப்படாததால் பொது மக்கள் நடந்து செல்லக் கூட முடியவில்லை. எனவே, நகராட்சி அதிகாரிகள் உடனே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.