சிதம்பரம், பிப். 10- சிதம்பரம் அண்ணாமலை நகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கான மைய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமை சென்னை மதர்சன் நிறுவனத்தின் நேர்காணல் முகாமை கல்லூரி முதல்வர் தன விஜயன் முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரியின் துணை முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார். இக்கல்லூரியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்களும், கீரப்பாளையம் காமராஜர் பாலி டெக்னிக் கல்லூரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அனைவருக்கும் பணி நியமன ஆணையை அண்ணா மலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் கதிரேசன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் கட்டிடவியல் துறைத்தலைவர் மோகன், மின்னணுவியல் துறைத் தலைவர் அருமைநாதன், கணினி துறைதலைவர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.