districts

img

அடையாள அட்டை வழங்க வேண்டும்: சாலையோர சிறு கடை வியாபாரிகள்

கடலூர், மே 31- சாலையோர வியாபாரிகளுக்கு அடை யாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர சிறுகடை வியாபாரிகள் சங்கம் சிஐடியு சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலி வியாபாரிகளை கண்டறிந்து நீக்க வேண்டும், ஒன்றிய அரசு அறி வித்துள்ள 10 ஆயிரம் ரூபாய் கடன் தொகையை அடையாள அட்டை இல்லாத வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும், மாநகர விற்பனை குழுவிற்கான தேர்தலை நடத்த வேண்டும், அடையாள அட்டை செல்லுபடியாகும் காலம் முடிந்தவர்களுக்கு புதுப்பித்துத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. கடலூர் மாநகரத் தலைவர் சுரேஷ்வரன் தலைமை தாங்கினார். இதில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில கன்வீனர் பி.கருப்பையன், மாவட்ட நிர்வாகிகள் வி.திருமுருகன், வி.சுப்பராயன், எஸ்.சங்கமேஸ்வரன், கணேசன், மனோகர், ராஜேந்திரன், அப்துல் ஹக்கீம், செல்வி ஆகியோர் பேசினர்.