districts

கடலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை மாநாடு: கே. பாலகிருஷ்ணன் பங்கேற்கிறார்

கடலூர்,ஜூன் 9- கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகிற 11 ஆம் தேதி மாவட்ட மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெறு கிறது.  இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் கூறியதாவது:- கடலூர் மாவட்டத்தில் சொந்த மனை யில்லாமல், மனை இருந்தும் பட்டா இல்லாமல் பல்லாண்டு காலம் வாழ்ந்து வரும் மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கி வீடு கட்டித் தர வேண்டும். கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி நவீனப்படுத்த வேண்டும்.  என்எல்சி நிறுவனத்தில் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். அவுட் சோர்சிங் முறையை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். சுரங்கம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புக்கான உத்தரவாதத்தை கொடுக்க வேண்டும். காண்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.  கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும்.  விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். கடலூரில் நின்று சென்ற காரைக்கால் மன்னார்குடி, ராமேஸ்வரம், உழவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் நின்று செல்ல வேண்டும். மாவட்டம் முழுவதும்  சேதமடைந்த சாலைகளை சீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வருகிற 11 ஆம் தேதி கடலூர் புதுப்பாளையத்தில் மாநாடு நடை பெறுகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதி மக்களும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு மாதவன் தெரிவித்தார்.