districts

img

ஊராட்சிமன்ற கணக்கை தணிக்கை செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

சிதம்பரம், டிச.  20- ஊராட்சிமன்றங்களில் நடைபெறும் முறைகேடு களை கண்டறிய கணக்கு களை தணிக்கை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடஹரி ராஜபுரம் ஊராட்சிமன்றத் துணை தலைவருக்கு வழங்கப்பட்ட அலுவலக சாவியை அவரிடம் வழங்க வேண்டும், கிராம சபைக் கூட்டத்திற்கு வார்டு உறுப்பினர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும், அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய் இணைப்பை சீரமைக்க வேண்டும், ஊராட்சிகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிய ஊராட்சி கணக்கை தணிக்கை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. இதில் மாவட்டச் செய லாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் செல்லையா, கிளைச் செயலாளர் சுந்தர மூர்த்தி ஆகியோர் கோரி க்கைகளை விளக்கிப் பேசினர்.