districts

நாசகர பட்ஜெட்டை கண்டித்து ஆக.1- இடதுசாரிகள் மறியல்

கடலூர், ஜூலை 28- முழுக்க முழுக்க கார்ப்பரேட் முத லாளிகளுக்கு சாதகமான பட்ஜெட்டை  தாக்கல் செய்துள்ள ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, ஆகஸ்ட் 1 அன்று இடதுசாரிக் கட்சிகள் நடத்தும் மறி யலில் அணி திரள்வோம் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறி யுள்ளார்.

கடலூரில் சனிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த கே. பாலகிருஷ்ணன், இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:

ஒன்றிய பாஜக அரசு, தனது நிதி நிலை அறிக்கையில் நாட்டின் நலனை  முன்னிறுத்துவதற்கு மாறாக, முழுக்க  - முழுக்க கார்ப்பரேட் முதலாளி களுக்கு சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் அறிக்கையாக நிதிநிலை அறிக்கையை மாற்றியுள்ளது.

தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஒன்றிய அரசு தனது நிதிநிலை அறிக்  கையில் புறக்கணித்துள்ளது. ஆட்சி யை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்  என்ற ஒரே குறிக்கோளுடன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பது கண்  டிக்கத்தக்கது.

‘நிதி ஆயோக்’ கூட்டத்தை, எதிர்க்  கட்சிகள் ஆட்சி செய்துவரும் மாநி லங்களின் முதலமைச்சர்கள் புறக்க ணித்ததை விமர்சனம் செய்யும் பாஜக  தலைவர்கள், மேற்கு வங்க முதலமைச்  சர் மம்தா பானர்ஜியை பேச விடாமல் தடுத்து நிறுத்தியது குறித்து, வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

இந்நிலையில், ஒன்றிய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து ஆகஸ்ட் 1  அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (லிபரேசன்) உள்ளிட்ட இடது சாரிக் கட்சிகள் சார்பில் ஒன்றிய அரசு அலு வலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடை பெறுகிறது.

கல்லூரி ஆசிரியர்கள்  நியமனத்தில் முறைகேடு

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரி யர் பணி நியமனத்தில் ஏராளமான முறை கேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள் ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள பல கல்லூரிகளில் ஆசிரியர்கள் முறைகேடாக பணியமர்த்தப் பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

ஒரே ஆசிரியர் 10 கல்லூரிகளில் பணி யாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரிப்பதற்கு அமைக் கப்பட்ட கமிட்டியும் முறையாக செயல்பட வில்லை. இதனால் அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள் ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முதல்வர் மறுபரிசீலனை  செய்ய வேண்டும்

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சாதி ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை தடுக்க நாங்கள் கடலூரில் மாநாடு நடத்தி யுள்ளோம். சட்டமன்றத்தில் ஏற்கெனவே அதிமுக ஆட்சிக் காலத்திலேயே இதுதொடர்பாக தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். 

ஆனால், இதற்கென தனிச் சட்டம் தேவை இல்லை என்று தமிழக முதல மைச்சர் கூறியிருப்பது ஏற்புடையதல்ல. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தனிச்சட்டம் தேவையில்லை என்று முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்த இந்த இடைப்பட்ட காலத்திலேயே இரண்டு, மூன்று ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. இவற்றைத் தடுக்க சமூ கத்தில் சாதி உணர்வு மழுங்கடிக்கப்பட்ட வேண்டும். 

சந்துரு பரிந்துரைகள் மீது நடவடிக்கை அவசியம்

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமை யில் குழு அமைத்து இந்த குழு ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. சில அரசுக்கு செய்துள் ளது. இந்த பரிந்துரைகளை கிடப்பில் போடாமல் பரிசீலித்து அரசு செயல்படுத்த வேண்டும். நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கையைப் பார்த்த பாஜக தலைவர் அண்ணாமலை இந்த அறிக்கையை கிடப்பில் போட வேண்டும் என்று கூறு கிறார். வர்ணாசிரம தர்மத்தை தூக்கிப் பிடிக்கிற சாதி உணர்வை வளர்க்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறதா, என்று அவர் பதில் கூற வேண்டும். அவரின் பேச்சு வன்மையாக கண்டிக் கத்தக்கது. 

சர்க்கரை ஆலை பிரச்சனை  அரசு தலையீடு தேவை!

கடலூர் மாவட்டத்தில், அம்பிகா சர்க்கரை ஆலை ஏற்கெனவே மூடி இருந்தது. தற்போது நிர்வாகம் மாறி, வேறு ஒரு நிர்வாகம் அதை எடுத்துள்ளது. அந்த நிறுவனத்துக்கு கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு இன்னும் பணம் வரவில்லை. விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் நிலுவையில் உள்ளது. இதனால் இதற்குப் பிறகு கரும்பு அனுப்பி விவசாயிகள் பெயரில் பணம் வந்தால், அதைக் கடனுக்கு பிடித்தம் செய்வார்கள். மேலும் புதிய கடனும் வாங்க முடியாது. எனவே, தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுத்து கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சம்பா சாகுபடி முழுமைக்கும் தண்ணீர் திறக்க வேண்டும்!

அணைகளில் போதிய தண்ணீர் இருந்தபோதும் கர்நாடகா அரசாங்கம் தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. அது ஏற்புடை யதல்ல. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும். தற்போது மேட்டூர் அணை 100 அடியை எட்டி யுள்ளது. எனவே தமிழக அரசு மேட்டூர் அணையை திறந்து சம்பா சாகுபடி நிறைவ டையும் வரை தண்ணீரை விட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாவட்டச் செயலா ளர் கோ. மாதவன், மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு உள்ளிட்டோர் உட னிருந்தனர்.