districts

அனைத்து ரயில்களும் கடலூரில் நின்றுச் செல்ல வேண்டும்: அனைத்துக் கட்சி கூட்டம் வலியுறுத்தல்

கடலூர், ஜூன் 16- கடலூரில் அனைத்து ரயில்களும் நின்றுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் வலி யுறுத்தியுள்ளன. கடலூர் மாநகர அனைத்து அரசியல் கட்சிகள், குடியிருப்போர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமையில் புதனன்று (ஜூன் 15) நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் ஏ.எஸ்.சந்திர சேகரன், மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.ரஜேஷ் கண்ணன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மு.மருதவாணன், தலைவர் டி.வெங்கடேசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில மாணவரணி அமைப்பாளர் தி.அருள்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் சுந்தரராஜன், மீனவர் விடுதலை வேங்கை மாநில நிர்வாகி கள் வெங்கடேசன், ரமேஷ், விசிக நகரச் செயலாளர் மு.செந்தில்,  விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொரோனா  பொதுமுடக்கத்திற்கு பிறகு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும் கடலூர் - திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற மன்னார்குடி, காரைக்கால் விரைவு ரயில்கள் தற்போது நிற்பதில்லை. எனவே மீண்டும் இந்த ரயில்கள் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலை யத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டு திருப்பாப்புலி யூர் ரயில் நிலையம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் நின்றுச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் பாண்டி இருப்புப்பாதை திட்டத்தை விரைந்து உருவாக்க வேண்டும். விழுப்புரம் - மயிலாடு துறை அனைத்து பாசஞ்சர் ரயில்களை யும் முழுமையாக இயக்க வேண்டும். முதியோர், மாற்றுத் திறனாளி களுக்கான சிறப்பு சலுகை மீண்டும் அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சியின் சார்பில் வரும் ஜூன் 28ஆம் தேதி திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.