districts

img

அகில இந்திய அளவில் வயலின் இசையில் 2-வது இடம் சிதம்பரம் அரசுப் பள்ளி மாணவிக்கு முதல்வர் வாழ்த்து

சிதம்பரம், ஜன.20- சிதம்பரம் ரயிலடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மீதிகுடி கிராமத்தைச் மாணவி திவ்ய பூங்கொடி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது இசை கலைஞரான தந்தை இசைகச் சேரி களில் புல்லாங்குழல் வாசித்து வருகிறார். வயலின் மற்றும் செவ்வியல் இசையின் மீது ஏற்பட்ட தாக்கத்தால் திவ்ய பூங்கொடி பயிற்சி பெற்று வந்தார். பள்ளிகளில் நடை பெற்ற கலை திருவிழா போட்டியில் குறுவட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடத்தை பிடித்தார். இதனையடுத்து, மாநில அளவில் கோவையில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் கலந்துகொண்டு முதலிடத்தை பிடித்தார். இதனால், ஒரிசா மாநிலம் புவ னேஸ்வரில் நடைபெற்ற அகில இந்திய அளவில் கலா உற்சவ் போட்டிக்கு தேர்வானார். அந்தப் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட மாநிலத்திலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 2-வது இடம் பிடித்தார். இதையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கம் பரிசு வழங்கி கவுரவித்தார்.  இதுகுறித்து பள்ளியின் இசை ஆசிரியை மீனாட்சி கூறுகையில்,“  ஏழ்மை நிலையிலும் வயலின் செவ்வியல் இசையில் போட்டிகளில் பங்கேற்ற மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பள்ளியின் ஆசிரியர்கள் செய்து வருகிறோம்”என்றார்.