districts

img

சாலை விரிவாக்க பணிக்காக  தோண்டிய பள்ளத்தால் விபத்து

கடலூர், நவ. 5- திட்டக்குடி அருகே பெருமுலை கிராமத்து செல்லும் சாலை விரிவாக்க பணிக்காக சுமார் 1 கிலொமீட்டர் தூரம் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. 2 மாதங்களுக்கு மேலாகியும் அந்த பணி முடிவடையாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளது. அந்த சாலை வழியாக சிறுமுலை, பெருமுலை, புலிவலம், கீரனூர், வேப்பூர் வரை செல்லும் அனைத்து பேருந்து களும் செல்கின்றன. மேலும் அன்றாட தேவைக்காக அருகி லுள்ள திட்டக்குடி நகரத்திற்கு சிறுகுறு விவசாயிகள், வணி கர்கள், பொதுமக்கள், கல்வி பயில பள்ளி, கல்லூரி மாண வர்கள் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டி யுள்ளது. பள்ளத்தில் ஏதும் ஜல்லி கொட்டி மூடாமல் தோன்டிய நிலையில், அங்கு எந்த பாதுகாப்பு தடுப்பும் வைக்காததால் தினசரி விபத்து நடைபெறுகின்றன.எனவே சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.