districts

img

கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 2 தொழிலாளர்கள் பலி

கடலூர், நவ. 28- புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி யில் பூச்சுவேலை செய்யச் சென்ற 2 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் கோண்டூர் கிராமத்தில் சேகர் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியில் பூச்சு வேலை செய்வதற்காக கட்டுமான தொழிலாளிகள் மணிகண்டன், அய்யப்பன், அறிவழகன் ஆகியோர் சென்றுள்ளனர். இவர்களில் மணிகண்டன், அய்யப்பன் இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி யுள்ளனர். இறங்கிய சில நிமிடங்களிலே இரு வரும் மயங்கினர். அவர்களை காப்பாற்றச் சென்ற அறிவழகனும் மயங்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் சேகர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மணிகண்டன், அய்யப்பன், அறிவழகன் ஆகிய 3 பேரையும் மீட்டனர். இதில் மணிகண்டன், அய்யப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மயங்கிய நிலையில் உள்ள அறிவழகன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கண்டமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.