ஈரோடு, ஜூன் 6- நூறுநாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி மறுக் கும், பட்லூர் ஊராட்சி நிர்வா கத்தை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் காத் திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஈரோடு மாவட்டம், அம்மா பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பட் லூர் கிராம ஊராட்சி உள்ளது. இக் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டப்படி வேலை அளிப்பதில்லை.
இதுகுறித்த கேள் விக்கு முறையாக பதிலளிக்க மறுப் பதால், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் சார்பில் ஊராட்சி மன்ற அலுவல கம் முன் காத்திருக்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர். பின்பு, ஊராட்சி மன் றத் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தி யும் போராட்டத்தை கைவிடாமல், காலை 10 மணியளவில் தொடங்கிய போராட்டம் பகல் 2 மணி வரை தொடர்ந்தது.
இதனையடுத்து, வட் டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட் டோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வேலை அட்டை வழங்கி அடுத்த வாரம் வியாழன் முதல் வேலை அளிக்கப்படும் என உறுதி யளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்டு போராட்டக்குழுவினர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து கலைந்து சென்றனர்.
இப்போராட்டத்திற்கு, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலை வர் சாவித்திரி தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் முருகன், உதவித் தலைவர் எஸ்.நல்லப்பன், கமிட்டி உறுப்பினர் ராமர் புலி, கிளை பொறுப் பாளர் காசிலிங்கம் உள்ளிட்ட ஏரா ளமான மாற்றுத்திறனாளிகளும், விவ சாய தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.