districts

img

மண்புழு உரம் தயாரிப்பில் அசத்தும் பெண்: பொதுமக்கள்-விவசாயிகள் பாராட்டு

அரியலூர், மார்ச் 13 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டத்தை அடுத்த தா.பழூர் அருகே உள்ள கோட்டியால் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு (31) எம்எஸ்சி, பிஎட் பட்டதாரியான இவ ருக்கு கோவேந்தன், பகலவன் என 2 மகன்கள்  உள்ளனர். இவரது கணவர் தீரன் தொழில் செய்து வருகிறார்.  இவருக்கு சிறு வயது முதலே விவசா யத்தில் அதிக ஆர்வம் இருந்ததால், தனது  தந்தை மண்புழு உரம் தயாரித்து, அதன் மூலம் விவசாயம் செய்து அதிக விளைச்சல் வந்ததை கண்டு, ஓய்வு நேரங்களை பயனுள் ளதாக மாற்ற மண்புழு உரம் தயாரிக்க துவங்கி னார். இவரது கணவரும் உதவியாக இருந்தார்.  முதலில் மண்புழு உரம் தயாரித்து அதனை  விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் தயாரித்ததை விவசாயிகள் உபயோ கப்படுத்தும் வண்ணம் சோழமாதேவி கே.வி.கே மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, அதன் மூலம் விளைச்சல் அதிகரித்ததால் விவசாயிகள் மண்புழு உரத்தை வாங்க ஆரம்பித்தனர். இதுகுறித்து அவர்கள் பல ருக்கு பரிந்துரை செய்தனர். மேலும் ஏதா வது செய்ய வேண்டும் என நினைத்து யூடியூப்  உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தயாரிப்பு முறைகளை பின்பற்றி பல கட்ட  பரிசோதனைகளை செய்து அதில் வெற்றி கண்டும், இதனை விரிவுபடுத்த என எண்ணி னார்.  இந்நிலையில், அமேசான் மூலம் தனது  விற்பனையை தொடங்கி, தற்போது தமிழகம் முழுவதும் மண்புழு உரம் விற்பனை செய்து  வரும் இல்லத்தரசியை அப்பகுதி மக்கள், விவ சாயிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்ற னர்.