அரியலூர், ஜன.21- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நக ராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணி யாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப் படும் எனக் கூறிய நிலையில் இதுவரை அத்தொகை வழங்கப்படவில்லை. பிடித்தம் செய்யப்பட்டுள்ள அரியர் பணத்தை 50 மாதமாக வழங்காமல் நகராட்சி நிர்வாகம் இழுத்தடிக்கிறது. தூய்மை பணியில் ஈடுபடுபவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங் களோ, சீருடைகளோ வழங்கப்படுவ தில்லை என குற்றம் சாட்டினர்.