districts

img

வரதட்சணை கேட்டு கர்ப்பிணியை அடித்து கொன்ற கணவன் கடும் நடவடிக்கை கோரி மாதர்கள், வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூர், அக்.10 - அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கம் மற்றும் சிலம்பூரில் உயிரிழந்த  நிறைமாத கர்ப்பிணி நந்தினி (எ) நிர்ம லாவின் பெற்றோர் ஆண்டிமடம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். வரதட்சணையால் அடித்து கொலை செய்யப்பட்டதை தற்கொலை என ஜோடிக்க முயற்சிப்பதையும், கொடூர கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கிடவும், இறந்து போன நிர்மலாவிற்கு உயிருக்கு நீதி கேட்டும், அவரை இழந்து வாடும்  அவரது பெற்றோர்களுக்கு நிவாரணம்  வழங்க கோரியும் மாதர் சங்கம் சார்பில்  அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலை வர் வாலண்டினா, மாவட்ட தலைவர்  பி.பத்மாவதி, மாவட்ட செயலாளர் டி.அம்பிகா, வாலிபர் சங்க மாவட்டச்  செயலாளர் துரை.அருணன் உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர். வாலி பர் சங்க மாவட்ட பொருளாளர் எ.அருண் பாண்டியன், மாவட்ட பொருளாளர் ஜெ. துர்கா, மாவட்ட தலைவர் ஆர்.ரவீந்திரன், ஒன்றிய செயலாளர் அரு ணாச்சலம், மாதர் சங்க ஒன்றிய செயலா ளர் எஸ்.சுகுணா, ஒன்றிய தலைவர் எம். சரஸ்வதி, ஒன்றிய பொருளாளர் எம்.அம்சாயாள், துணை செயலாளர் வி. சாந்தினி, துணைத் தலைவர் பி.சித்ரா உட்பட பல பெண்கள் கலந்து கொண்ட னர். இதில், நிர்மலாவின் பெற்றோ ருக்கு ஆதரவாக சிபிஎம் மாவட்ட செய லாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணி வேல், ஒன்றியச் செயலாளர்கள் எம்.வெங்கடாசலம் ஆகியோர் கண்டன முழக்கமிட்டனர்.

நிர்மலாவின் கொலைக்கு உடந்தை யாக செயல்பட்ட கணவரின் உறவினர்க ளையும் கைது செய்ய வேண்டும். நிறை மாத கர்ப்பிணி நிர்மலாவின் கொலையை தற்கொலை என காவல் துறை மாற்றி, மூடி மறைக்கிறது. இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். நிர்மலாவை இழந்து வாடும்  பெற்றோருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கி, அவர்களை பாது காக்க வேண்டும். ஆண்டிமடம் காவல்  நிலைய சரகத்திற்குட்பட்ட பல கிரா மங்களில் தொடர்ச்சியாக பெண்கள் மீதும், பெண் குழந்தைகள் மீதும் பாலி யல் வன்முறைகள், கொலைகள் நடப் பதை தடுத்து நிறுத்த வேண்டும் என மாதர் சங்கம், வாலிபர் சங்கத்தின் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டி மடம் வட்டக் குழுக்கள் சார்பில் வலியுறுத் தப்பட்டன.  நிர்மலாவின் மரணம் குறித்து அவரது தந்தை வெங்கடேசன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், “திருமணம் செய்ய சம்மதம் இல்லாத நிலையில், வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டாள். திருமணத்தின் போது இரு குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நாங்கள் வளையல் காப்பு செய்ய பணம் தயார் செய்துவிட்டு வருவதாக திரும்பி  சென்ற நிலையில் எனது மகள் தீக்  குளித்ததாக கூறினர். ஆனால் வரதட் சணை கேட்டு அடித்து கொன்றுள்ள னர். எனது மகள் மற்றும் வயிற்றில் இருந்த ஒன்பது மாத சிசு என இரண்டு உயிர்கள் பறிபோயுள்ளன. இதற்கு  காவல்துறை உடந்தையாக செயல்படு கிறது. எனது மகள் இறப்பிற்குரிய நீதி  கிடைக்க வேண்டும்” என்றார் கண்ணீருடன்.