அரியலூர், மார்ச் 6- அரியலூரில் கட்டப்பட வுள்ள பேருந்து நிலைய கட்டு மானப் பணிகளை போக்கு வரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக் கல் நாட்டி துவக்கி வைத் தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ் வதி தலைமை வகித்தார். எம்எல்ஏ கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், துணைத் தலைவர் கலியமூர்த்தி, நக ராட்சி ஆணையர் தமயந்தி (பொ), வட்டாட்சியர் கண் ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண் டனர். தொடர்ந்து, கீழப்பழூர் ஊராட்சியில், காவல் நிலைய அருகில் பொதுப் பணித்துறை (கட்டிட கட்டு மானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் ரூ.2.32 கோடி மதிப் பில், மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக கட்டிட கட்டுமான பணிக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் அடிக்கல் நாட்டினார்.