court

img

ராஜீவ்காந்தி கொலை வழக்கு விடுதலை செய்யக்கோரி ரவிச்சந்திரன் வழக்கு... அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு....

மதுரை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன்.  ஏழு ஆண்டுகள், 10ஆண்டுகள், 14 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் பலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட நிலையில்,  நான் விடுதலைசெய்யப்படவில்லை. 29 ஆண்டு களாக தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலையில் மன உளைச்சல் ஏற்படுவதோடு, உடல் நலத்தையும் பாதிக்கிறது.  தமிழக சட்டமன்றத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது.இதுகுறித்து விரைவில் முடிவெடுக்ககோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. 1,600 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் முன்கூட்டிய விடுதலைக்கான மனு பரிசீலிக்கப் பட்டுள்ள  நிலையில் எங்களது விடுதலை தொடர்பான சட்ட மசோதா காத்திருப்பில் உள்ளது.  சிறையி லிருக்கும் என்னை விரைவாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில்,” ஏழு பேரின் விடுதலை தொடர்பான முடிவு ஆளுநரின் ஒப்புதலுக்காக உள்ளது.  இதே வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு எவ்வித உத்தரவையும்  பிறப்பிக்க இயலாது” எனத்தெரிவித்தார்.அதற்கு மனுதாரர் தரப்பில், “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5  சதவீத  உள் ஒதுக்கீடுவிவகாரத்தில், அரசு முடிவெடுத்தது. ஆகவே இந்த விவகாரத்திலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறினார்.இதையடுத்து நீதிபதிகள், இது குறித்து தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

;