court

img

10 ஆண்டுகளாக நிலுவையில் கிடக்கிறது தூத்துக்குடியில் பெட்ரோல், வெடிகுண்டு வீச்சு வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்க!

சென்னை, ஏப்.26- தூத்துக்குடியில் 10 ஆண்டுகளாக நிலுவை யில் இருக்கும் பெட்ரோல் , வெடிகுண்டு வீச்சு  வழக்கின் குற்றவாளிகளை விரைந்து கைது  செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு  மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் வருவாய் கிராமத்திலுள்ள 915 ஏக்கர் விவசாய நிலத்தினை புதுக்கோட்டை செல்வம் என்பவர் தலைமையிலான நிலமோசடி கும்பல் மோசடி யான ஆவணங்கள் மூலம் அபகரித்திடும் நோக்  கத்தோடு மேற்படிகிராம மக்களை அச்சுறுத்தி மிரட்டி வந்தனர்.

எனவே கிராம மக்கள் 2008 ஆம் வருடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக் குடி மாவட்டச் செயலாளரை அணுகி உதவிட கேட்டதின் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அந்த கிராம மக்களுடன் நின்றது. இதை பொறுத் துக் கொள்ள முடியாத புதுக்கோட்டை செல்வம் என்பவர் அடியாட்கள் துணையோடு பல சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டார். எனவே அவர் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் வழக்கறிஞர் என்ப தால் அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டி தூத் துக்குடியில் ஒரு சில வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் உண்மை நிலையினை தெரி வித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்  றைய தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் க. கனகராஜ் சில தோழர்களுடன் 06.01.2012 அன்று தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்திற்கு சென்ற போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இத்து டன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற போது அங்கேயும் கட்சி தோழர்கள் தாக்கு தலுக்கு உள்ளாகினர். அன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் க. கனகராஜ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் அவரது மனை விக்கு தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. மன அழுத்தத்திற்கும் ஆளாகி சிகிச்சை பெற வேண்டி வந்தது.

குண்டுவீசிய வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுத்திடுக!

இதுதொடர்பான வழக்கில் எந்த முன்னேற்ற மும் இல்லாத நிலையில் சிபிசிஐடி புலன் விசா ரணைக்கு 2012 ஆம் ஆண்டிலேயே மாற்றப்பட் டது. சுமார் 10 ஆண்டுகள் எந்த முன்னேற்றமும் இல்லாத சூழலில் அவ்வழக்கினை முடித்துவிடு வது என்கிற முடிவுக்கு காவல்துறை வந்தது. பாதிக்கப்பட்டவர் சார்பிலும், கட்சியின் சார்பிலும் உறுதியாக மறுத்த சூழலில் 01.04.2022 அன்று வெடி குண்டு வீச்சில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெட்  ரோல் குண்டு வீசிய வழக்கில் சில வழக்கறி ஞர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதும் அதில் ஒருவர் தமிழ்நாடு (ம) புதுச்சேரி மாநில பார் கவுன்சில் உறுப்பினராக உள்ள டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு என்றும் தெரிய வருகின்றது.

மேற்படி டி. மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு தூத்துக்குடி செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவானது 25.04.2022 அன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே சிபிசிஐடி போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளி களை கைது செய்திட வேண்டும். வழக்கின் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு  என்பவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை யில் இருப்பதாக தெரிய வருகிறது. எனவே, தமிழ்நாடு (ம) புதுச்சேரி மாநில பார் கவுன்சில் உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் மீது பார்  கவுன்சில் தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண் டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.