court

img

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 2 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக இருந்த செந்தில்குமார் மற்றும் அருள்முருகன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 13 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.  தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.