court

img

அதானி குழுமங்கள் குறித்து செய்திகள் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது

புதுதில்லி, பிப். 24 - அதானி குழுமத்தின் ஊழல் முறைகேடு கள் தொடர்பான ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’  அறிக்கையை ஊடகங்கள் வெளியிடு வதற்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் எம்.எல். சர்மா தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஜனவரி 24 அன்று ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை வெளியானதை அடுத்து, பங்குச் சந்தையில் அதானியின் சொத்து மதிப்பு சரிவை சந்தித்தது. இதையடுத்து, அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன் பர்க் ரிசர்ச் அறிக்கையை ஊடகங்கள் வெளி யிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். “ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதி மன்றத்தால் குழு அமைக்கப்படும்

வரை, ஊடக அறிக்கையை தடை செய்ய வேண்டும்” என்று எம்.எல். சர்மா தனது மனு வில் கோரிக்கை வைத்திருந்தார். “ஹிண்டன் பர்க் அறிக்கை என்பது சதியின் விளைவா இல்லையா என்பதை விசாரிப்பதற்கும் ஒரு  குழு அமைக்கப்பட வேண்டும்” என்று சர்மா  கூறியிருந்தார். மேலும், “அதானி குழுமம் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்தி கள் வருகின்றன. இதுபோன்ற அறிக்கை களால் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நீதிமன்ற உத்தரவு வரும் வரை அதானி குழுமம் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும்” என்றும் வலி யுறுத்தி இருந்தார். இந்த வழக்கு வெள்ளியன்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, எம்.எல். சர்மா கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட நீதிபதிகள், “எங்கள் உத்தரவை ஏற்கெனவே ரிசர்வ் செய்துள்ளோம், அதை அறிவிப்போம். வேறு ஏதாவது சரியான காரணம் இருந்தால் கூறுங்கள்” என்ற நீதி பதிகள், “அதானி குழும நிறுவனங்கள் குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு தடைவிதிக்க முடியாது” என்று தீர்ப்பளித்த னர். இந்த விவகாரத்தில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது  பிப்ரவரி 17-ஆம் தேதி விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், அந்த வழக்கை ஒத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.