court

img

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: தீர்ப்பு ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழ்நாட்டில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணையில், பேரணிக்கு அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, ஒரே நேரத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு அனுமதி மறுத்து இருந்தது. இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
 

;