கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த விசாரணையில் வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையை வரும் வியாழக்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பணியிட பாதுகாப்பை உறுதி செய்ய 10 மருத்துவர்கள் கொண்ட தேசிய அளவிலான குழு அமைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி தீர்ப்பளித்துள்ளனர்.
இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதாவது: மேற்குவங்க பெண் மருத்துவருக்காக நீதிகேட்டுப் போராடும் மருத்துவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான் எங்களை நம்புங்கள், போராட்டத்தை விடுத்து பணியை தொடருமாறு அவர் கேட்டுக்கொண்டார்