அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றத்தின் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிகளின் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
நீதிபதிகளுக்கான பதவி உயர்வுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற நீதிபதி எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 பேருக்கு குஜராத் உயர்நீதிமன்றம் பதவி உயர்வு கொடுத்தது. இது தொடர்பான வழக்கை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், குஜராத் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை மற்றும் அரசின் அறிவிக்கை சட்டவிரோதமானது என்றும் தெரிவித்த உச்ச நீதிமன்றம் நீதிபதி எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிகளின் பதவி உயர்வை நிறுத்தி வைத்தது.