court

img

அத்திக் அகமது கொலை: விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல்

உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் எம்.பி அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர், போலீசார் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில், அத்திக் அகமது  மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ஆம் தேதி இரவு, இருவரும் கைகளில் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் நீதிமன்றத்திலிருந்து பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது அவர்களை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். செய்தியாளர்களிடம் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த 3 பேர்  திடீரென்று துப்பாக்கியால் அத்திக் அகமது, அஷ்ரப் அகமதுவை சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, 6 ஆண்டுகளில் 183 குற்றவாளிகளை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.