பணியிடத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கக் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அரசு அலுவலகங்களில் முறையாக அமல்படுத்தாது ஏன் என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் ஹீமா ஹோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில்2013 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணியிட பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. உடனடியாக ஒன்றிய அரசு அலுவலகங்களில் பாலியல் புகார்களை விசாரிக்க அமைப்புகளை உருவாக்க வேண்டும். மாநில அளவிலும் அரசு மற்றும் தனியார்த் துறைகளிலும் 2013 இல் கொண்டு வரப்பட்ட சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை ஒன்றிய அரசு கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் பணியிடத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க 2013 இல் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அரசு அலுவலகங்களில் முறையாக அமல்படுத்தாது ஏன் என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.