தன்பாலின திருமணங்கள் குறித்து அங்கீகரிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் முடிவெடுக்கலாம். அவர்களுக்கான சட்ட உரிமை, சலுகைகள் கிடைக்க ஒன்றிய அரசு வழிவகுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தன்பாலினத்தவர் அதாவது ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியன்று இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, தன்பாலினத்தவர் இடையேயான திருமணம் போன்ற நிலையான உறவுகளை தாங்கள் சிந்தித்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார். இதனிடையே தன்பாலினத் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பாக 10 நாட்களுக்குள் கருத்துகளைத் தெரிவிக்க கடந்த 19ம் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியது. இதற்கிடையில் தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது.
தற்போது இன்று மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தது இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது; தன்பாலின திருமணங்கள் குறித்து அங்கீகரிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் முடிவெடுக்கலாம். ஆனால் அவர்களுக்கான சட்ட உரிமை, சலுகைகள் கிடைக்க ஒன்றிய அரசு வழிவகுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.